டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் இன்று காலமானார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் உசசநீதிமன்னத்தின் வழக்கறிஞருமான முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஆவார். சிவகங்கை மாவட்டம் ஏரியூரைச் சேர்ந்தவர். உடல்நலக்குறைவு காரணமாக 2026 செப்டம்பர் 17 ல் அவர் 79வது வயதில் காலமானார், 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கைத் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2004 வரை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2004 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழகப் பிரதிநிதியாக இரண்டு முறைகள் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். மத்திய இணை அமைச்சர்: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசில், 2013 முதல் 2014 வரை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக திறம்படச் செயல்பட்டார்.
நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும், அக்கட்சியின் நாடாளுமன்றக் கொறடாவாகவும் செயலாற்றியுள்ளார். அத்துடன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) வருவதற்கு காரணமாக ஆர்வலர்களோடு இணைந்து முக்கியப் பங்களிப்புகளை வழங்கியுள்ளார். 1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) கட்சியில் இருந்த முன்னாள் நிதியமைசசர் ப. சிதம்பரத்தை சிவகங்கைத் தொகுதியில் தோற்கடித்து நாடு தழுவிய அளவில் அரசியல் தலைவர்கள் கவனத்தைப் பெற்றார். இலங்கைத் தமிழர் பிரச்சினை, மீனவர் உரிமைகள் மற்றும் கச்சத்தீவு விவகாரங்களில் சிறந்த நிபுணத்துவம் பெற்றிருந்தவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் (UNGA) இரண்டு முறை உரையாற்றிய பெருமைக்குரியவர்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூருடைய அண்ணன் தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் புலவர் சொ. பகீரதநாச்சியப்பனின் மகனாவார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 18, 2026 அன்று மாலை 3:30 மணியளவில் அவரது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் ஏரியூரில் கிராமத்தில் நடைபெறுகிறது, , பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் முதலில் அச்சு ஊடகமாக வெளிவரும் சமயம் 2013 ஆம் ஆண்டில் நம் சார்பாக அவரது சென்னை பெசன்ட் நகர் வீட்டிலிருந்து டெல்லி மத்திய பத்திரிகைத் தகவல் அமைச்சகத்தில் பேசியது இன்றும் நம் நினைவுப் பதிவில் உள்ளது, ஒரு அன்பான தலைவரை காங்கிரஸ் மற்றும் சிவகங்கை மாவட்ட மக்கள் இழந்தது பேரிழப்பு, அவரைச் சார்ந்த அவரது மகன் ஜெயசிம்ம நாச்சியப்பன், அவரது மைத்துனர் வழக்கறிஞர் தேவதாஸ் மற்றும் அவருடன் பயணித்த காங்கிரஸ் கட்சியின் இளைஞர் தலைவர் ஒய். பழனியப்பன் போன்ற பலருக்கும், நமது ஆழந்த இரங்கலைத் தெரிவித்து டாக்டர் அவரது இறுதிச் சடங்குகள் செப்டம்பர் 18, 2026 அன்று மாலை 3:30 மணியளவில் அவரது சொந்த ஊரான ஏரியூரில் நடைபெறுகிறது அவரது ஆன்மா இறைவன் நிழலில் அமைதியாக இளைப்பாறட்டும் என பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் ஓம் சாந்தி



கருத்துகள்