முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட நால்வரும் கூடுதலாகக் கைது

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை மரண வழக்கில், சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர், திருப்புவனம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வரை சிறையில் அடைக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.


மடப்புரம் அஜித்குமார் படுகொலை மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4காவல்துறை அலுவலர்களைச் சிறையிலடைக்க உத்தரவு,





சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், தமிழ்நாடு காவல்துறையின் அதிகார வரம்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் சில காவல்துறை பணியாளர்கள் மீதான நீதித்துறையின் நடவடிக்கை தற்போது எட்டியுள்ளது.




ஆரம்பத்தில் ‘தடயங்களை மறைத்தல்’ என்ற சாதாரணப் பிரிவின் கீழ் மூடி மறைக்க முயன்ற இந்த வழக்கினை, மதுரை மாவட்ட நீதிமன்றம் தற்போது ‘கொலை வழக்காக’ மாற்றியுள்ளது. இது லாக்-அப் மரணங்களை வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ சித்தரிக்க முயலும் பணி செய்யும் அதிகார வர்க்கத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும், நீதித்துறையின் நியாயமான, மற்றும் தீர்க்கமான தலையீடாகவும் அமைந்துள்ளது,.



மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நீதிபதி தாமோதரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் செயல்களைக் கூர்மையாகவே ஆய்வு செய்த நீதிபதி, அவர்கள் மீது ஏற்கனவே இருந்த ‘தடயங்களை மறைத்தல்’ என்ற பிரிவை மாற்றி, ‘கொலை வழக்காக’ பதிவு செய்யப் பிறப்பித்த

உத்தரவைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய 4 உயர் அலுவலர்களும் உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர்:

அதில் சண்முகசுந்தரம் -காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் (மானாமதுரை சரகம்),

இரமேஷ்குமார் - ஆய்வாளர் (திருப்புவனம் காவல் நிலையம்),

சிவகுமார் - சார்பு ஆய்வாளர்,

இளையராஜா - தலைமைக் காவலர்,

இவர்கள் நால்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட நீதிமன்றம் ஆணையிட்டது. உயர் பதவியில் உள்ள அலுவலர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுவது, தற்போது அத்நி பூத்த நிகழ்வாக அமைந்துள்ள நிலையில் சட்டம் மற்றும் நீதித்துறை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணையின் அடிப்படையில் தற்போது மொத்தம் 10 காவல்துறை அலுவலர்கள் நீதிமன்றக் காவலில் உள்ள நிலை

1 சண்முகசுந்தரம் துணைக் கண்காணிப்பாளர் (மானாமதுரை சரகம்)

2 ரமேஷ்குமார் ஆய்வாளர் (திருப்புவனம்),

3 சிவகுமார் சார்பு ஆய்வாளர்,

4 இளையராஜா தலைமை காவலர்,

5 கண்ணன் தனிப்படை காவலர் ஏற்கனவே கைதானவர்

6 ராஜா தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்

7 ஆனந்த் பிரபு தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்

8 சங்கர் தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்

9 மணிகண்டன் தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்

10 இராமச்சந்திரன் தனிப்படைக் காவலர் ஏற்கனவே கைதானவர்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் நடந்த நிகழ்வுகள் அதிகார வர்க்கத்தின் மெத்தனத்தையும், சிபிஐ- விசாரணையின் தீவிரத்தையும் உணர்த்துகின்றன:

 மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தனிப்பட்ட ஒரு பெண்ணின் நகை காணாமல் போனதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், அங்கு காவலாளியாக இருந்த அஜித்குமாரைத் தனிப்படைக் காவலர்கள் விசாரணைக்காக சட்டவிரோதமாக அழைத்துச் சென்று அவர்கள் நடத்திய சித்திரவதையில் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்தச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் கண்டனங்களை எழுப்ப வைத்தது. வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசால் உத்தரவிடப்பட்டது. சிபிஐ துணைக் கண்காணிப்பாளர் ரோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி

 விசாரணையின் முடிவில், சிபிஐ அதிகாரிகள் மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விரிவான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கு வெறும் ஒரு லாக்-அப் மரணம் மட்டுமல்ல; இது காவல்துறைக்குள் நிலவும் மௌன உடன்படிக்கை எனும் Blue Code of Silence ஐ உடைத்தெறிந்துள்ளது. பொதுவாக, கீழ்நிலைப் பணிக் காவலர்கள் மீது மட்டுமே இதுவரை நடவடிக்கை எடுக்கப்படும் சூழலில், ஒரு துணைக் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது மிகவும் முக்கியமான சட்டம் நீதி முன்னேற்ற முன்னுதாரணமாகும்.

காவல்துறையினர் ஆதாரங்களை மறைக்க முயன்றதை நீதிமன்றம் கண்டித்துள்ள விதம், புலனாய்வு அமைப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதை நன்றாகவே வலியுறுத்துகிறது. ஒரு மரணத்தைத் தடம் தெரியாமல் மறைக்க முயலும் உயர் அலுவலர்களுக்குச் சட்டம் ஒருபோதும் விலக்களிக்காது என்பதை நீதிபதி தாமோதரனின் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இது காவல்துறை நிர்வாகத்தில் உடனடி மற்றும் ஆழமான நிர்வாகச் சீர்திருத்தங்களின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது இந்த உத்தரவு,

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, துணைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட 10 பேரும் தனித்தனி வாகனங்களில், பலத்த காவலர்கள் பாதுகாப்போடு மதுரை மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தச்சம்பவம் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 16-ஆம் தேதி இவர்களது நீதிமன்றக் காவல் முடிவுக்கு வரும் நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதித்துறை மற்றும் அரசியல் மற்றும் செய்தித் தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட கொலையான அஜித்குமாரின் குடும்பத்திற்கு நீதி கிடைப்பதற்கான முதல் படிக்கல்லாக இந்த ‘கொலை வழக்கு’ மாற்றம் கருதப்படுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்த விவகாரம் காவல்துறை மீதான கடந்த கால ஆட்சி விமர்சனங்களை வலுவாக்கும் என்பதில் எந்த விதமான ஐயமில்லை,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...