முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இலங்கை இந்தியா இருநாடுகளின் ராஜ்ஜிய வரலாற்றில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் பயணம்

இலங்கை இந்தியா இருநாடுகளின் ராஜ்ஜிய வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங்கின் இலங்கைப் பயணம் பார்க்கப்படுகிறது! 

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 8 முதல் 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை தலைநகர் கொழும்புக்குப் புறப்படுகிறார்! இதற்கு முன்பு 

1988ல் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த கேசி பந்த் கொழும்பு சென்றார்! இதைத் தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இலங்கை செல்வது கடந்து 38 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.சீனா வழங்கியுள்ள கடனை இலங்கை அரசால் திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹம்பன்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருடத்திற்கு குத்தகைக்கு கொடுத்துள்ளது இலங்கை. சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் இந்த துறைமுகம், அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது.இலங்கை துறைமுகத்தில் இருந்து சீனாவின் உளவு கப்பல், இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்தியா சந்தேகம் அடைந்து வருகிறது. இலங்கையுடன் சீனா நெருக்கம் காட்டுவது இந்தியாவுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என எண்ணுகிறது.

இந்த நிலையில்தான் இலங்கை உடனான உறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார்.

இவர் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே-வை சந்தித்தார். அப்போது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.அதன்பின் இலங்கை அதிபர் அனுர குமார திசனாயகே "இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எங்கள் மண்ணை பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்" என்று உறுதி அளித்துள்ளார்.

இலங்கை விமானப்படைக்கான L70 ரக பீரங்கிகளை மேம்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் தேசிய மாணவர் படை (NCC) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு (NDC) இடையிலான ஒத்துழைப்பு ஆகியவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டதாக இந்திய பாதுகாப்பத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 வரலாற்றுப் பூர்வமாக இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இந்தியாவின் நேரடி ராணுவ பங்களிப்பு அந்நாட்டில் நீண்ட கால அரசியல் வடுக்களை ஏற்படுத்தியதால் இருதரப்பிலும் தலைவர்கள் வெளியேறவு அமைச்சர்கள் துறைச் செயலர்கள்  நிலையிலான சந்திப்புகள் தொடர்ந்த போதிலும் பாதுகாப்பு அமைச்சக நிலையிலான இலங்கைப் பயணம் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டு வந்தது!

 இந்தியப் பெருங்கடலின் சர்வதேசக் கடல்சார் பாதையில் இலங்கை மிக முக்கியமான இடத்தில் உள்ளது!இலங்கையில் அம்பாந்தோட்டை  துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுகங்களுக்கு யுவான் வாங் போன்ற சீன உணவு மற்றும் ஆய்வுக் கப்பல்களின் வருகை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது! இது தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் ஆந்திரத்தின் ஹரிகோட்டா இஸ்ரோ மையங்களுக்கு மறைமுக அச்சுறுத்தலாக அமையலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் கவலை எழுப்பி வருகின்றனர்!இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்தியா அதன் கண்காணிப்பு வலை அமைப்பை விரிவுபடுத்தியுள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்தும் பொறுப்பையும் மேற்கொண்டு ள்ளது. நரேந்திர மோடியின் மகாசாகர்  பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர முன்னேற்றம் மற்றும் நட்பு நாடுகளுக்கு முன்னுரிமைக் கொள்கைகள் இதற்கு உதவியுள்ளன!

 இலங்கைக்கு இந்தியா வழங்கும் ரோந்து கப்பல்கள் டோர்னியர் உளவு விமானங்கள் மற்றும் கடன் உதவிகள் மூலம் அந்நாடு அதன் ராணுவ பலத்தை வலுப்படுத்த முடியும்! இந்தியாவுக்குத் தனது உள்நாட்டுப் பாதுகாப்பு உற்பத்தி வாயிலாக உதிரிபாக ஏற்றுமதிச் சந்தை விரிவடைகிறது! மேலும் இரு தரப்புத் தகவல் பகிர்வு மையம் மூலம் கடல் வழிப் பாதைகள் பலப்படுவதோடு இந்திய பெருங்கடலில் அந்நிய நீர்மூழ்கிக் கப்பல்களின் நகர்வுகளை இந்தியா நிகழ் நேரத்தில் கண்காணிக்க முடியும்! அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் சீனா குத்தகைக்கு எடுத்தது போன்ற இலங்கையின் ஒற்றைச் சார்பு நிலையை இந்தியாவின் பொருளாதார உதவிகளும் அதானி குழுமத்தின் கொழும்புத் துறைமுகம் மேற்கு முனைய மேம்படுத்துதல் திட்டமும் மாற்றி அமைத்துள்ளன!

 இத்தகைய சூழலில் அமையும் ராஜ நாத் சிங் அவர்களின் பயணத்தின் மூலம் “ஸ்லினெக்ஸ்” எனப்படும் இலங்கை இந்தியக் கூட்டு ராணுவ ஒத்திகைகள் மற்றும் மித்ர சக்தி எனப்படும் கூட்டுறவுப் பயிற்சிகள் வலுப்பெறும்! அத்துடன் திருகோணமலை எண்ணெய்ச் சேமிப்பு வளாகப் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்! இலங்கை முப்படையினருக்கு இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் வழங்கப்படும் பயிற்சித் திட்டங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது! அந்த வகையில் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணம் இருதரப்புகளுக்குமான புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.

 இந்தச் சந்திப்புக்குப் பிறகு இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் மீன்பிடி பிரச்சினையை எல்லை மீறல் அல்லது  பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதாமல் மனிதாபிமான வாழ்வாதாரப் பிரச்சனையாக கையாள இது வழி வகுக்கலாம்! மேலும் இருநாட்டுக் கடலோரக் காவல் படைகளுக்கு இடையே உடனடித் தகவல் தொடர்பு வசதிகளை உருவாக்குவதன் மூலம் தவறான புரிதலால் மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்கலாம் என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...