மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் மேகமலை வசிக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழில் மக்களுக்கு நீநியும் உரிமையும் கேட்ட அனைத்துக் கட்சிப் போராட்டம்
தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேகமலை – மாஞ்சோலை மக்களின் உரிமைக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மக்களின் உரிமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் ரவி பச்சமுத்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பனருட்டி தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஆர். தனபாலன்,
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமி, மீனவர்கள் சங்கத் தலைவர்கள் மகேஸ்வரன் மற்றும் போஸ்ட் மணி, விவசாய அணி தலைவர் வி.என். அரசு, மற்றும் மேகமலை -மாஞ்சோலை சார்பாக மக்களின் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பிற்காக அனைத்துக் கட்சிகளின் சார்பாக கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்த்தனர்
அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுடன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் சமீபத்தில் மேகமலை மலைக்கிராம மக்கள் வெளியேற்றத்திற்கு எதிராகப் பெரிய அளவிலான அனைத்துக் கட்சி போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. உச்ச நீதிமன்றம் மேகமலை வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், மக்களை வெளியேற்றவும் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் வணிக ரீதியிலான விடுதிகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வரும் சுமார் 98 மலைக்கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது,
மக்கள் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதை ஏற்காமல் எதிர்க்கின்றனர். வன உரிமைச் சட்டம் 2006-ன் கீழ் தங்களுக்குப் பட்டா வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மறுஆய்வு மனு (Review Petition) தாக்கல் செய்ய வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்துகின்றனர். போராட்டத்தில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் மதுரை மற்றும் தேனி பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து ஆதரவு அளித்துள்ளனர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் எஸா. கிருஷ்ணசாமி போராட்டத்தில் கலந்துகொண்டு, காடு மற்றும் புலிகள் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை வெளியேற்றுவது வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல் என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
சிபிஎம் (CPI-M) மாநிலச் செயலாளர் பி. சண்முகம் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. ராணுவப் படைகளைப் பயன்படுத்தி மக்களை வெளியேற்றலாம் என்ற நீதிமன்றத்தின் கருத்துக்கு அவர் பலத்த கண்டனம் தெரிவித்தார். தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளனர். போராட்டத்தின் வடிவங்கள் தேனி மற்றும் மதுரை சுற்றுவட்டார மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டு முழு அடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.மாஞ்சோலை மற்றும் மேகமலை ஆகிய இரண்டு பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தென் மாவட்டங்களில் தொடர் போராட்டங்கள் அனைத்து கட்சியை சேர்த்த நிர்வாகிகள் மூலஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன, போராட்டம் அடுத்த கட்டத்தில் நகர்கிறது அரசு நடவடிக்கை எதிர் பார்த்து






கருத்துகள்