முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கன்னியாகுமாரி மாவட்ட காவல்துறைக்கு புதிய கண்காணிப்பாளர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (டாக்டர் ஆர். ஸ்டாலின் ராஜா ஐ.பி.எஸ் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.


தமிழ்நாடு அரசு இன்று செப்டம்பர் 11, 2026 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவின் படி, அவர் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணி நியமனமின்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அன்ஷுல் நாகர் IPS கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் எஸ்பி ஸ்டாலின் ராஜா குறித்து கடுமையான பெண்கள் குற்றச்சாட்டு கலந்த விமர்சனங்களை முன்வைத்திருந்ததைத் தொடர்ந்து கன்னியா குமரி மாவட்டத்தில் அந்த சமூக ஊடக நபர் மீது 4 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


ஆனால் இதில் ஏதோ சில தகவல்கள் உளவுத்துறை சேகரித்து அதன்படி இந்த அரசியல் மற்றும் சமூக ஊடக விவாதப் பின்னணியில் இந்த திடீர் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண்கள் தொடர்பான சில புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அவர் இந்த மாவட்டப் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மேற்கு பகுதியின் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்த அன்சுல் நாகர் IPS கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர் ஸ்டாலின்ராஜா IPS மீதான குற்றச்சாட்டுகள்: தனக்கென சமூக வலைத்தளங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் குழுக்களை வைத்துக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதன் மூலம் இளம் பெண்களை ஈர்க்க முயற்சி செய்கிறார் ரீல்ஸ்களுக்கு விருப்பம் தெரிவிக்கும் பெண்களைக் கண்டறிந்து, காவலர்கள் மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு, வாட்ஸ்அப் எண்களைப் பெற்றுப் பேசுவதாகவும், பல பெண்களிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளதாகவும் அவர் குறைந்தது 60 பெண்களுடன் இதுபோன்று தொடர்பில் இருந்ததாகவும், அவரிடம் ஏமாந்த 5 பெண்கள் ஒன்றிணைந்து ஒரு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி இது குறித்துப் பேசியுள்ளதாகவும் அவர்மீது குற்றம் சுமத்திய சமூக ஊடக நபர் குறிப்பிடுகிறார். மேலும்,

விரைவில் சென்னையில் வேறொரு பெண்ணை அவர் திருமணம் செய்ய உள்ளதாகவும் இந்த விவகாரம் குறித்து உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் உள்துறைச் செயலாளர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தும், அவர்கள் ஏன் முதலமைச்சரின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்லவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை காவல் அதிகாரிகள் சீருடையில் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் போடுவதால் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். ஸ்டாலின் ராஜா IPS, சமூக வலைத்தளங்களில் தனக்கென 150 முதல் 200 போலிக் கணக்குகளை உருவாக்கிப் பராமரித்து வருவதாகக் கூறுகிறார்.

அவரது ரீல்ஸ்களைப் பரப்பவும், புகழ் பாடவும் 'ஸ்டாலின் ஐடி விங்' என்ற பெயரில் ஒரு குழு செயல்படுகிறது, எனவும், தனது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதாகவும், அதற்கு 'லைக்' செய்யும் பெண்களைக் கண்காணிக்க அவரது கேம்ப் அலுவலகத்திலேயே ஒரு தனிக்குழு செயல்படுவதாகவும் கூறுகிறார்.கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின் ஐ.பி.எஸ் குறித்து, சவுக்கு சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்ததாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் காவல் நிலையங்களில் ஒரே குற்றம் பல புகார்  அளித்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய காவல் நிலையங்களில் இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம் ஒன்று வழக்கு நான்குகன்னியாகுமரியில் ஷைஜீ தலைமையிலான குழுவினர் நேசமணி நகர் காவல் நிலையத்திலும்,  ரெகு தலைமையிலான குழுவினர் கோட்டார் காவல் நிலையத்திலும், இசைமணி தலைமையிலான குழுவினர் வடசேரி காவல் நிலையத்தில் துணைக் கண்காணிப்பாளரிடமும், பிரேம் தலைமையில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திலும்  புகார்  அளித்துள்ளார்கள். இதனிடையே,

கன்னியாகுமரி மாவட்டக் காவல்து கண்காணிப்பாளர் (எஸ்.பி) டாக்டர் ஸ்டாலின் மீது சவுக்கு சங்கர் தொடர்ந்து புகார் தெரிவித்து வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  அது தற்போது உண்மை எனில் வழக்கு இனி திசைமாறும், இந்த புகார் அளித்த நபர்கள் யார் அவர்கள் இது குறித்து விபரம் முழுவதும் அறிவார்களா என்பதும், விசாரணை நடத்த வேண்டும், இதில் குற்றம் நடந்ததாக விபரம் கூறிய ஊடகம் மற்றும் குற்றம் செய்த அரசு அலுவலர் இருவரும் சம்பந்தப்பட்டது  இதில் மூன்றாம் நபர் புகாரில் நான்கு இடத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏன் என்பது எழு வினா? சங்கர் ஒரு நீதிமதி முன் இந்த செய்தியை வாக்குமூலமாகப் பதிவு செய்தால் நிச்சயம் விசாரணை நடவடிக்கை வறு விதமாக அமையும், அதே போல் இது பொய் தகவல் எனில் அந்த சமூக வலைத்தளத்தின் மீது நடவடிக்கை வரும்,  அரசியல் கட்சி நபர் போல அரசு அலுவலருக்கு ஆதரவாக புகார் கொடுத்து  மூன்றாம் நபர் நடவடிக்கை என்பது சரியா என்பது இங்கு எழுவினா?இந்த விவகாரம் கனிம வளக் கடத்தலைத் தடுத்ததன் காரணமாக, கடத்தல் கும்பல் மற்றும் அதற்கு ஆதரவாக இருந்த சில அரசியல்வாதிகள் தரப்பிலிருந்து அவருக்குத் தொடர் எதிர்ப்புகள் கிளம்ப எஸ்பி ஸ்டாலினை அப்பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என மேல்மட்டத்தில் தீவிர அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எது உண்மை என்பது விரைவில் வெளிச்சமாகலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...