மஹாராஷ்டிராவின் மிகப்பணம் படைத்த பாஜக எம்.எல்.ஏ மற்றும் தொழிலதிபரான பராக் ஷா,
செப்டம்பர் 2026-ல் அவரது ஆடம்பர வாழ்க்கையை விடுத்து, மும்பை வீதிகளில் ஒரு நாள் பிச்சைக்காரர் வேடமிட்டு யாசகம் பெற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகப் பேசப்படுகிறது. இந்த சுவாரசியமான சம்பவம்
பிச்சைக்காரனாக மாறியதற்கான காரணம் பராக் ஷா ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் மும்பை காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தனக்கு ரூபாய் .3,383 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
அவர் குஜராத்தி ஜைனம் எனும் சமண மதத்தைச் சேர்ந்தவர். ஜைன மதப் புனித மாதத்தையொட்டி, மனிதர்களுக்குள் இருக்கும் அகந்தை, பணத் திமிர் மற்றும் அதிகார போதையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவரது ஆன்மீகக் குருவான நம்ரமுனி மகாராஜின் அறிவுரையின்படி இந்த வித்தியாசமான முயற்சியை அவர் மேற்கொண்டார். அடையாளம் தெரியாத தோற்றமாக
மாறிய வேடம்: தனது பாதுகாவலர்கள், சொகுசு கார்கள் மற்றும் விலைமதிப்பற்ற உடமைகளைத் தவிர்த்துவிட்டு, அழுக்கான ஆடைகள் மற்றும் மேக்கப் மூலம் தன்னை ஒரு பிச்சைக்காரராக மாற்றிக் கொண்டார்.
இந்த வேடத்தில் அவர் தனது சொந்த அலுவலகத்திற்குச் சென்றபோது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அவரது சொந்த வாட்ச்மேனே அவரை அடையாளம் தெரியாமல் விரட்டியடித்துள்ளார்.
அவரது நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றபோதும், அவரும் பிச்சைக்காரர் என்று நினைத்து பராக் ஷாவைத் துரத்தியுள்ளார்.
மும்பை தெருக்களில் கிடைத்த அனுபவம்
மும்பையின் காட்கோபர் வீதிகளில் சுமார் 3 மணி நேரம் யாசகம் கேட்ட அவருக்கு சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடந்தன:
வீதியில் சென்ற சிலர் அவர் மீது பரிதாபப்பட்டு ரூபாய் .20 தர்மம் செய்துள்ளனர்.
பசியோடு இருந்த அவருக்கு, அங்கிருந்த ஒரு எளிய சமோசா கடைக்காரர் பணமே வாங்காமல் இலவசமாக சமோசா கொடுத்து பசியாற்றியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக அவர் பிச்சை எடுத்ததன் மூலம் ரூபாய் .84 மட்டுமே ஈட்ட முடிந்தது. பராக் ஷா பகிர்ந்த நெகிழ்ச்சியான உண்மை
இந்த அனுபவத்திற்குப் பிறகு தனது மேக்கப்பைக் கலைத்துவிட்டு, மீண்டும் அதே இடங்களுக்குச் சென்று தனக்கு உதவிய மக்களுக்கு அவர் நன்றி கூறினார்.
இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய பராக் ஷா
"சமூகத்தில் நமக்குக் கிடைக்கும் அனைத்து மரியாதைகளும் நம்மிடம் இருக்கும் பதவி, பணம் மற்றும் அந்தஸ்துக்காக மட்டுமே கிடைக்கிறது. பிச்சைக்காரர் வேடத்தில் நான் சென்றபோது, வழக்கமாக என்னைச் சந்திக்க வரிசையில் நிற்கும் அதே மனிதர்கள் என்னை விட உயர்ந்தவர்களாக தங்களை உணர்ந்தனர். தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் இந்தச் சமூகத்தில், ஏழைகளிடம் தான் மனிதநேயம் அதிகமாக இருக்கிறது என்பதை இந்த ஒரு நாள் வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்,
நடிகர் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் போல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு கோடீஸ்வர அரசியல்வாதி பிச்சைக்காரராக மாறிய சம்பவம் இந்தியாவின் தற்போதைய ஊடகங்கள் மூலம் பேசுபொருளாக மாறியுள்ளது.





கருத்துகள்