முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விநாயகர் சதுர்த்தி வழிபாடு குறித்த வரலாற்றுப் பார்வை

 "சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 



இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும் திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூடிக வாகனே இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல்ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து 

குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்என வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி இன் செவியில்




தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் எனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவத்(து) இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து........." விநாயகர் அகவல் வரிகளில் - ஒளவையார் அருளியது இன்னும் தொடரும்.. விநாயகர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை மத நல்லிணக்கத்திற்காக வெளியிட்டவர்கள் ஆற்காட்டு நவாப்புகள் மற்றும் மைசூர் மன்னரான திப்பு சுல்தான் ஆவர். அமர்ந்த நிலையிலான விநாயகருக்குப் பதிலாக, நிற்கும் விநாயகரான ஆநிருத்த கணபதி உருவத்தை முதன்முதலில் ஆட்சியில் தங்கள் நாணயங்களில் பொறித்தவர்கள் ஆற்காட்டு நவாப்புகள் ஆவர். நாணயத்தின் மறுபக்கத்தில் 'நவாபு' என்ற பெயரையும் பொறித்துள்ளனர். இஸ்லாமிய மன்னராக இருந்தாலும், மைசூர் சுல்தானான திப்பு சுல்தானின் செம்பு நாணயங்களில் (காசு) யானை முகக் கடவுளான விநாயகர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதாக நாணயவியல் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது அதுபோல சிவகங்கை ஜமீன் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் விநாயகர் உருவம் பொறித்த செப்பு நாணயங்களை (காசுகளை) வெளியிட்டுள்ளனர். இந்த நாணயங்களின் முன்பக்கத்தில் விநாயகர் தனது வாகனமான மூஷிகத்தின் (எலி) மீது அமர்ந்திருப்பது போன்றும், பின்பக்கத்தில் சிவலிங்கத்தின் வடிவமும் பொறிக்கப்பட்டிருக்கும்.



அதேபோல கொங்கு நாட்டை ஆண்ட சேர மன்னர்கள் வெளியிட்ட செப்பு நாணயங்களில் விநாயகர் வழிபாடு பிரதிபலித்தது இந்த நாணயத்தின் முன்பக்கத்தில் விநாயகர் சம்மணமிட்டு அமர்ந்திருப்பது போன்றும், பின்பக்கத்தில் ஸ்ரீ லட்சுமி தேவி கமல ஆசனத்தில் அமர்ந்திருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மைசூர் ஆட்சியாளரான திப்பு சுல்தானும் விநாயகர் உருவம் கொண்ட செப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளார். இதில் விநாயகர் ஒரு பீடத்தின் மீது அமர்ந்து, தனது கைகளில் ஆயுதங்களை ஏந்தியவாறு பெரிய தொந்தியுடன் காட்சியளிப்பார். இந்தியாவில் சோழர்கள் வென்று வந்த தாய்லாந்து நாட்டின் 10 பாட் நாணயத்திலும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்தோனேசியா நாட்டின் பழைய 20,000 ரூபியா பணத்தாளிலும் விநாயகரின் உருவம் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று தான் மத மச்சரியங்கள் மேலோங்கி நிற்கிறது அரசியல் காரணமாக, தமிழ்நாடு வரலாற்றில் விநாயகர் வழிபாடும் அதற்கான ஆலயங்களும் பல்வேறு மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மிகச் சிறப்பாகக் கட்டப்பட்டு வளர்ந்துள்ளன. தமிழ்நாட்டின் மிக முக்கிய விநாயகர் ஆலயங்களையும், அவற்றை உருவாக்கிய அரச வம்சங்களையும் பார்த்தால் பாண்டிய மன்னர்கள் மருதங்குடி எனும் இராஜநாராயணபுரம் ஆகிய

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தமிழ்நாட்டின் மிக பழமையான குடைவரைக் கோயில்களில் ஒன்றாகும். இது பொது ஆண்டு 4-ஆம் நூறாண்டு முதல் 7-ஆம் நூற்றாண்டுக்குள் முற்கால பாண்டிய மன்னர்களால் குடைவரைக் கோயிலாகச் செதுக்கப்பட்டது. இங்குள்ள 6 அடி உயர கம்பீரமான விநாயகர் சிலை இரு கரங்களுடன், வலம்புரித் தும்பிக்கையோடு தனித்துவமாக அமையப்பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க விநாயகர் ஆலயமும் பாண்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் எழுப்பப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. பல்லவ மன்னர்களால் திருச்சிராப்பள்ளி உச்சிப் பிள்ளையார் கோயில் திருச்சிராப்பள்ளியின் அடையாளமாகத் திகழும் இந்த உலகப் புகழ்பெற்ற மலைக்கோட்டை பிள்ளையார் கோயிலின் ஆரம்பகால மென்மையான பாறை குடைவரைப் பணிகளை பொது ஆண்டு 7-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்கள் தொடங்கினர்.திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் (முழு வடிவம்): பல்லவர்களால் தொடங்கப்பட்ட இக்கோயிலின் கட்டுமானப் பணிகளை, பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் விஜயநகரப் பேரரசின் கீழ் முழுமையாகக் கட்டி முடித்தனர் அதேபோல் வாதாபி கணபதி (திருச்செங்காட்டங்குடி): பல்லவ மன்னர் முதலாம் நரசிம்ம வர்மனின் படைத்தளபதியான பரஞ்சோதி முனிவர் (சிறுத்தொண்ட நாயனார்), சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியை வென்றதன் நினைவாக அங்கிருந்த விநாயகர் சிலையைத் தமிழ்நாட்டிற்கு எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்தார்.

           (
இது விளையாட்டு விநாயகர்
அதேபோல் சோழ மன்னர்கள் கங்கைகொண்ட விநாயகர் (கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில்): சோழப் பேரரசன் முதலாம் இராஜேந்திர சோழன் தனது வட இந்தியப் போர் கங்கை நோக்கிய போர்ப் பயணத்தின் வெற்றிக் கோப்பையாக பால வம்ச அரசர்களிடமிருந்து கொண்டு வந்த வரலாற்றுப் புகழ்பெற்ற விநாயகர் சிலை இதுவாகும். வெள்ளை விநாயகர் ஆலயம் தஞ்சாவூர் கோட்டையின் கிழக்கு வாசலில் (கீழ்வாசல்) அமைந்துள்ள இந்த ஆலயத்தின் விநாயகரைச் சோழ மன்னர்கள் தங்களின் கோட்டைப் பகுதி வழிபாட்டிற்காகப் பிரதிஷ்டை செய்ததாகக் கருதப்படுகிறது. அதேபோல் விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்கள் சாசிவேகாலு கணேசா மற்றும் கடலேகாலு கணேசா (ஹம்பி, கர்நாடகா): விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 8 அடிக்கும் அதிகமான பிரம்மாண்ட விநாயகர் சிலைகளும் ஆலயங்களும் விஜயநகர மன்னர்கள் மற்றும் வணிகர்களால் கட்டப்பட்டன. என்பதே, தமிழ் பக்தி இலக்கியத்தில் விநாயகர் (பிள்ளையார்) வழிபாடு மிக முக்கியமான மற்றும் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது. எந்த ஒரு செயலைத் தொடங்குவதற்கும் முன்னால் விநாயகரை வழிபட்டுத் தொடங்குவது ஹிந்து மரபாகும். "முழுமுதற் கடவுள்" மற்றும் "பிரணவப் பொருள்" (ஓம்) எனப் போற்றப்படும் விநாயகரைப் பற்றி சைவத் திருமுறைகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் பிற்காலப் பக்தி இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன,


                   (
இது அரசியல் விநாயகர்)
சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகளில் விநாயகர் வழிபாடு பரவலாகக் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர்: இவர் தனது தேவாரப் பாடல்களில் விநாயகரை "ஆனைமுகன்" என்றும், "கணபதி" என்றும் போற்றுகிறார். சம்பந்தர் இறைவனை வழிபடச் செல்லும் போது தடைகள் நீங்க விநாயகரை முதலில் வணங்கியதாகக் குறிப்புகள் உள்ளன, சைவத் திருமுறைகளைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பி, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரின் பேரருள் பெற்றவர். இவர் விநாயகர் மீது திருவட்டைப் பிள்ளையார் திருவந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை உள்ளிட்ட நூல்களைப் பாடி, பக்தி இலக்கியத்தில் விநாயகர் வழிபாட்டை நிலைநிறுத்தினார். திருமூலர் (திருமந்திரம்): பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில், விநாயகரை வழிபட வேண்டிய அவசியத்தை திருமூலர் அழகாகக் குறிப்பிடுகிறார்:"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைபுந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே." என்கிறார் அதேபோல ஔவையாரின் விநாயகர் அகவல் பக்தி இலக்கியத்தில் விநாயகரைப் பற்றிப் பாடப்பட்ட நூல்களில் மிக உயரிய இடத்தைப் பெறுவது ஔவையார் அருளிய விநாயகர் அகவல் 72 அடிகளைக் கொண்ட அகவற்பாவால் ஆன தத்துவ நூல். விநாயகரின் உருவ அழகை, "சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட..." எனத் தொடங்கி ஔவையார் வர்ணிக்கிறார். வெறும் துதிப்பாடலாக மட்டுமில்லாமல், மனித உடலில் இருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பும் யோக நெறி மற்றும் ஆன்மீக ரகசியங்களை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டி நூலாகவும் இது போற்றப்படுகிறது. விநாயகரின் தோற்றம், அவரது லீலைகள் மற்றும் அவரை வழிபடும் முறைகளை 10 முதல் 15-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த இந்த நூல் விரிவாக விவரிக்கிறது. இதில் விநாயகரின் 1000 திருநாமங்களைக் கூறும் 'விநாயக சஹஸ்ரநாமம்' இடம்பெற்றுள்ளது. விநாயகரின் எட்டு அவதாரங்களை விவரிக்கும் புகழ்பெற்ற வடமொழிப் புராண நூலிது. பொறாமை, பேராசை, மதம் (தலைக்கனம்), மோகம் போன்ற மனிதனின் தீய குணங்களை (அசுரர்களை) அழிக்க விநாயகர் எடுத்த அவதாரங்களை இது விளக்குகிறது, பிற்காலப் பக்தி இலக்கியங்கள்
"
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கங்கணபதயே வரவரத ஸ்ர்வ ஜனம்மே வசமினய ஸ்வாஹா"
கச்சியப்ப சிவாச்சாரியார்: இவரது கந்தபுராணத்தில், முருகப் பெருமான் வள்ளித் திருமணம் புரிவதற்கு விநாயகர் யானை வடிவம் எடுத்து உதவி செய்த பக்திப் பின்னணிச் சுவை விரிவாகப் பாடப்பட்டுள்ளது. இவரது திருப்புகழ் பாடல்களின் தொடக்கத்தில் விநாயகர் துதி "கைத்தல நிறைகனிவப்பொடு...") பாடப்பட்டு, காரிய சித்திக்கு விநாயகர் வழிபாடு எவ்வளவு முக்கியம் என்பது வலியுறுத்தப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் பக்தி இலக்கியப் பங்களிப்பாக பாரதியார் "விநாயகர் நான்மணி மாலை" என்ற நூலை இயற்றி விநாயகரைப் போற்றியுள்ளார். பக்தி இலக்கியத்தில் விநாயகர் வெறும் உருவ வழிபாட்டுத் தெய்வம் மட்டுமல்லாமல்; அவர் அறிவு (புத்தி), ஞானம் (முக்தி) மற்றும் தடைகளைத் தகர்க்கும் ஆற்றலின் மொத்த வடிவமாகத் திகழ்கிறார். அதன் பின் தற்போது 1985 ஆம் ஆண்டு முதல் விநாயகர் ஊர்வலங்கள் ஹிந்து அமைப்புக்களின் ஏற்பாடடில் மும்பையில் நடப்பது போல துவங்கி சமய மறுமலர்ச்சிக்கு தற்காலம் வழி வகுத்ததுள்ளது, 1980 க்கு முன் ஆலய வழிபாடு செய்யாமல் வாழ்ந்த ஹிந்து மக்கள் பலர் தற்போது வழிபாடுகளை நடத்தும் நிலை தான் பக்திநெறி வளர்ச்சி ஆகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...