மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழிச்சாலையில் பிராமணம்பட்டி திறக்கப்படாத சுங்கச்சாவடியில் வாகனக் கட்டணத்தொகைக்கான சோதனை ஓட்டம் துவக்கம்
பட்டாக்குறிச்சி பேச்சில்லா கிராமம் நெல்மேனி அய்யனார் கோவில் அருகில் மேலூர்-காரைக்குடி புதிய நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை 338 எந்த ஊருக்குள்ளும் செல்லாமல் திருப்பத்தூர் வெளிப்பகுதி வழியாகச செல்கிறது. ஆறு ஆண்டு கால திட்டப்பணிகள் பூர்த்தியடைந்த நிலையில் தற்போது வாகனங்கள் இந்த நான்குவழிச்சாலையில் செல்லத்துவங்கியுள்ளன. இந்த சாலையில் திருப்புத்தூரிலிருந்து 6 கி.மீ.,தூரத்தில் பிராமணம்பட்டியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இருபுறமும் தலா நான்கு வழிகளில் வாகனங்கள் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. சென்சார் மூலம் இயங்கும் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் வந்து நின்றவுடன் திரையில் கடட்ணத்தொகை தெரிகிறது. தானாக கட்டணம் வசூலித்த பின்னர் வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இது போன்று இருபுறமும் தலா 3 வழிகளில் சென்சார் முறையில் தானியங்கியாக ஆட்கள் இல்லாமல் வாகனக் கட்டணம் வசூலிக்கப்பட்டு தணிக்கையாகிறது. இருபுறமும் முதல் வழியில் பணமாக கட்டணம் செலுத்தும் வகையில் பணியாளர்களுடன் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வகையில் உள்ளது. இந்தத் தணிக்கையில் விரைவுச்சாலை (பாஸ்டாக்கில்) பணம் இல்லாத வாகனங்கள் செல்லலாம். கட்ந்த சில நாட்களாக இந்த டோல்கேட்டில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. சோதனை ஓட்டமாக சரியான கட்டணத்தை காட்டுகிறதா, வாகன அனுமதியாகிறதா என்பதை வைத்து ஸ்கேன்,கேமிரா உள்ளிட்ட கருவிகள் செயல்பாடுகளை சோதிக்கப்படுகிறது. சுங்கச்சாவடியில் வழக்கமாக காணப்படும் கூரை வசதி இல்லை. மற்ற சுங்கச்சாவடி போன்றே, கழிப்பறை,ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன.மதுரையிலிருந்து வரும் இரு சக்கர வாகனம் செல்லும் பாதையில் தூண் இடைஞ்சலாக உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
NHAI பொதுமேலாளர் சேந்தன் கூறுகையில்,‛ தற்போது சுங்கச்சாவடியில் கட்டணத்திற்கான வாகனத்தணிக்கை சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதிக அளவில் வாகனங்கள் வரத்துள்ளது. ஆம்புலன்ஸ்கள் வருகையும் கூடுதலாக உள்ளது.சோதனை ஓட்டம் முடிந்த பின்னரே கட்டண வசூல் துவங்கும். அதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும். ரோடுகளில் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது. ரோட்டோரங்களில் மரங்கள் வளர்ப்பு, மண் சரிவில் செடி்கள் வளர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன.’ என்றார். திட்டப்பணிகள் ஐந்து சதவீதம் பாக்கி உள்ள நிலையில் இன்னும் பாதுகாப்பு பரிசோதனை முடிவடையாத நிலையில் ஆகஸ்ட் மாதம் பிரதமர் திறக்க வேண்டிய நிலையில் பின் தள்ளிப்போனது, பணிகள் மெதுவாகவே நடக்கிறது,


கருத்துகள்