முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல சொத்துக்களைக் குவித்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தவறான பண முதலீட்டு நபர்கள் இடங்களில் ED சோதனை

சென்னை, இராமநாதபுரம், கோழிக்கோடு, கண்ணூர்,   மல்லாபுரம் மற்றும் திருச்சூர். ஆகிய ஊர்களில் உள்ள 18 இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடந்தது. மேலும் 

 மொத்தம் 5 வழக்குகளும் அதிலுள்ளன. தென் பிராந்தியத்தின் அனைத்து மண்டலங்களிலும் 30 வளாகங்களில் பல்வேறு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ED ஒரே நேரத்தில் நடத்திய தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் நாஷா முக்த் பாரத் கட்டளையின் கீழ் இந்தத் தேடல்கள் நடத்தப்பட்டன. தேடுதல் வளாகம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விரிந்து பரவியுள்ளது. PMLA ன் கீழ் விசாரிக்கப்படும் 8 வெவ்வேறு வழக்குகளிலும் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்குகளில் இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மெத்தப்பேட்டமைன் கடத்தல் மற்றும்  ஹவாலா பரிவர்த்தனைகள்  அடங்கும். தமிழ்நாட்டில்  இராமநாதபுரத்தில் தலா 2 இடங்களிலும், சென்னையில் 6, நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணியில் 6 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. 950 கிராம் முதல் 54.6 கிலோ எடையுள்ள மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள், பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பின்வரும் போதைப்பொருள் வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் PMLA சட்டப்படி விசாரணையை நடத்தி வருகிறது:

2024 ஜூன் 11, ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பிரஜைகளான என் அஜந்தன் மற்றும் கே மதுஷன் ஆகியோரிடமிருந்து 1.47 கிலோ மெத்தப்பேட்டமைன் எனும் போதை வஸ்து கைப்பற்றப்பட்டது. அதில் மூன்று நாட்களுக்குப் பிறகு, முகமது ரிசாலுதீனிடமிருந்து பணம் பெறும்போது கே. கிருஷ்ண குமாரிடம் என்சிபி 193/13 என்ற கடை எண் முகவரியில் . இந்தியக் கரன்சியான ரூபாய் 1.29 லட்சம், அமெரிக்க டாலராக 30,000, மற்றும் இலங்கை ரூபாய் 5,030 ம் மீட்கப்பட்டது. அந்த வளாகத்தை துபாயில் வசிக்கும் எஸ்.நிசார்தீனுக்கு முகமது ரிசாலுதீன் என்பவர் நடத்தி வந்தார். ஆனால் அத்தகைய கடத்தலில் இருந்து எழும் பணத்தின் பின்னணி , ரசீது மற்றும் இயக்கம். ஆகியன அதில் அடங்கும்.

24 ஜூலை 2024- ஆம் தேதி சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே NCB யால் பைசுல் ரஹ்மான் என்ற நபர் பிடிபட்டார், மேலும் அவரிடமிருந்து 5.970 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதை வஸ்து கைப்பற்றப்பட்டது, இது இலங்கைக்கு கடத்திச் செல்வதற்கான நோக்கம் கொண்டது. சையது இப்ராஹிம், மூலம் 

எம்.அலெக்ஸை 2025 ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை-மதுரை சாலையில் NCB மறித்தபோது 950 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் ரூபாய் .2 லட்சம் கரன்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது குடும்பம் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் தளியமடிக்கண்ணி ஆகிய இடங்களில் போதைப்பொருள் மூலம் வந்த வருமானத்தை 54 இறால் பண்ணைகளாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.  நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற இடங்களில் உள்ள இறால் பண்ணைகள் மற்றும் அசையா சொத்துக்களில் மெத்தப்பெடடமைன் மற்றும் கஞ்சா விற்பனையில் முதலீடு செய்யப்பட்டதை அமலாக்கத் துறை இயக்குனரகம் கண்டறிந்துள்ளது.      குற்றம் சாட்டப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம் அலெக்ஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 2025 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதில் கருப்புப் பணத்தை வெள்ளை ஆக்கிய குற்றம் பண மோசடிச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002 எம். அலெக்ஸின் (அலெக்ஸ் எனும் மகாலிங்கம் என்று அழைக்கப்படும் நபர்) சொத்துக்கள் மற்றும் நிதிச் சுவடுகளை இலக்காகக் கொண்டது. செயற்கை போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தல் மூலம் கிடைக்கும் கருப்புப்பண வருமானத்தை வெள்ளை ஆக்குவது குறித்து விசாரணை சோதனையில் மையம் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அமலாக்கத் தைறை விவரங்களின் சரிபார்க்கப்பட்ட பதிவு மற்றும் தொகுப்பு கீழே உள்ளது: 


விசாரணையின் சுருக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்: நாகப்பட்டினம் விழுந்தமாவடியில் வசிக்கும் எம்.அலெக்ஸ், பல வழக்குகளில்  குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டவர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுக்கோட்டையில் உள்ள மேலவிளக்குடியில் மெத்தாம்பேட்டமைன் ஹைட்ரோகுளோரைடு மற்றும் ரொக்கத்தை வைத்திருந்த போது போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCB) தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பெறப்பட்ட முறைகேடுகள். அசையா சொத்துக்கள், சொகுசு பங்களாக்கள், வாகனங்கள் மற்றும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தாளியமடை ஆகிய பகுதிகளில் பரவியிருந்த சுமார் 54 இறால் பண்ணைகளில் பணம் குற்றங்கள் மூலம் வந்த வருவாய் மாற்றப்பட்டன. என்பது காரணமாகச் சோதனை நடந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...