பல சொத்துக்களைக் குவித்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தவறான பண முதலீட்டு நபர்கள் இடங்களில் ED சோதனை
சென்னை, இராமநாதபுரம், கோழிக்கோடு, கண்ணூர், மல்லாபுரம் மற்றும் திருச்சூர். ஆகிய ஊர்களில் உள்ள 18 இடங்களில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடந்தது. மேலும்
மொத்தம் 5 வழக்குகளும் அதிலுள்ளன. தென் பிராந்தியத்தின் அனைத்து மண்டலங்களிலும் 30 வளாகங்களில் பல்வேறு போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் ED ஒரே நேரத்தில் நடத்திய தேடுதல் சோதனை நடவடிக்கைகளில் நாஷா முக்த் பாரத் கட்டளையின் கீழ் இந்தத் தேடல்கள் நடத்தப்பட்டன. தேடுதல் வளாகம் கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விரிந்து பரவியுள்ளது. PMLA ன் கீழ் விசாரிக்கப்படும் 8 வெவ்வேறு வழக்குகளிலும் தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. மேலும் அதிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்குகளில் இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மெத்தப்பேட்டமைன் கடத்தல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் அடங்கும். தமிழ்நாட்டில் இராமநாதபுரத்தில் தலா 2 இடங்களிலும், சென்னையில் 6, நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணியில் 6 இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது. 950 கிராம் முதல் 54.6 கிலோ எடையுள்ள மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள், பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்வரும் போதைப்பொருள் வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் PMLA சட்டப்படி விசாரணையை நடத்தி வருகிறது:
2024 ஜூன் 11, ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பிரஜைகளான என் அஜந்தன் மற்றும் கே மதுஷன் ஆகியோரிடமிருந்து 1.47 கிலோ மெத்தப்பேட்டமைன் எனும் போதை வஸ்து கைப்பற்றப்பட்டது. அதில் மூன்று நாட்களுக்குப் பிறகு, முகமது ரிசாலுதீனிடமிருந்து பணம் பெறும்போது கே. கிருஷ்ண குமாரிடம் என்சிபி 193/13 என்ற கடை எண் முகவரியில் . இந்தியக் கரன்சியான ரூபாய் 1.29 லட்சம், அமெரிக்க டாலராக 30,000, மற்றும் இலங்கை ரூபாய் 5,030 ம் மீட்கப்பட்டது. அந்த வளாகத்தை துபாயில் வசிக்கும் எஸ்.நிசார்தீனுக்கு முகமது ரிசாலுதீன் என்பவர் நடத்தி வந்தார். ஆனால் அத்தகைய கடத்தலில் இருந்து எழும் பணத்தின் பின்னணி , ரசீது மற்றும் இயக்கம். ஆகியன அதில் அடங்கும்.
24 ஜூலை 2024- ஆம் தேதி சென்னை கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே NCB யால் பைசுல் ரஹ்மான் என்ற நபர் பிடிபட்டார், மேலும் அவரிடமிருந்து 5.970 கிலோ மெத்தாம்பெட்டமைன் போதை வஸ்து கைப்பற்றப்பட்டது, இது இலங்கைக்கு கடத்திச் செல்வதற்கான நோக்கம் கொண்டது. சையது இப்ராஹிம், மூலம்
எம்.அலெக்ஸை 2025 ஏப்ரல் 13 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை-மதுரை சாலையில் NCB மறித்தபோது 950 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் ரூபாய் .2 லட்சம் கரன்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது குடும்பம் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் தளியமடிக்கண்ணி ஆகிய இடங்களில் போதைப்பொருள் மூலம் வந்த வருமானத்தை 54 இறால் பண்ணைகளாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி போன்ற இடங்களில் உள்ள இறால் பண்ணைகள் மற்றும் அசையா சொத்துக்களில் மெத்தப்பெடடமைன் மற்றும் கஞ்சா விற்பனையில் முதலீடு செய்யப்பட்டதை அமலாக்கத் துறை இயக்குனரகம் கண்டறிந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நாகப்பட்டினத்தைச் சேர்ந்த எம் அலெக்ஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் 2025 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதில் கருப்புப் பணத்தை வெள்ளை ஆக்கிய குற்றம் பண மோசடிச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002 எம். அலெக்ஸின் (அலெக்ஸ் எனும் மகாலிங்கம் என்று அழைக்கப்படும் நபர்) சொத்துக்கள் மற்றும் நிதிச் சுவடுகளை இலக்காகக் கொண்டது. செயற்கை போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தல் மூலம் கிடைக்கும் கருப்புப்பண வருமானத்தை வெள்ளை ஆக்குவது குறித்து விசாரணை சோதனையில் மையம் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அமலாக்கத் தைறை விவரங்களின் சரிபார்க்கப்பட்ட பதிவு மற்றும் தொகுப்பு கீழே உள்ளது:
விசாரணையின் சுருக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்: நாகப்பட்டினம் விழுந்தமாவடியில் வசிக்கும் எம்.அலெக்ஸ், பல வழக்குகளில் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டவர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதுக்கோட்டையில் உள்ள மேலவிளக்குடியில் மெத்தாம்பேட்டமைன் ஹைட்ரோகுளோரைடு மற்றும் ரொக்கத்தை வைத்திருந்த போது போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் (NCB) தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஹவாலா நெட்வொர்க்குகள் மூலம் பெறப்பட்ட முறைகேடுகள். அசையா சொத்துக்கள், சொகுசு பங்களாக்கள், வாகனங்கள் மற்றும் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, தாளியமடை ஆகிய பகுதிகளில் பரவியிருந்த சுமார் 54 இறால் பண்ணைகளில் பணம் குற்றங்கள் மூலம் வந்த வருவாய் மாற்றப்பட்டன. என்பது காரணமாகச் சோதனை நடந்தது.




கருத்துகள்