முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு அரசு லண்டனில் தகுதியான தொழில் நிறுவனங்களுடன் புதிய MOU

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், லண்டனில் ரூபாய் .11,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.



முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கிரேட் பிரிட்டன் லண்டன் நகர் சென்றுள்ள நிலையில், இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Samvardhana Motherson International Limited.முதலீட்டுத் தொகை: ரூபாய் .11,000 கோடி. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதி ஆகிய பிரிவுகளில் இந்த முதலீடு செய்யப்படவுள்ளது. இந்தப் புதிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டுதல் துறையின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா நிறுவனத்தின் பிரிவுத் தலைவர் பேரி பெயிண்டர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.



இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா  Motherson International Ltd., நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து,  வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் .11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  கூட்டிணைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்,  சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் குழுமத்தின் உலகளாவிய சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் பாரி பெயிண்டர் மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப. ஆகியோர் கையெழுத்திட்டு, ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.   




இந்த நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு சி. ஜோசப் விஜய் மேற்கொண்டுள்ள இந்த முதல் வெளிநாட்டுப் பயணம், மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைப்பதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், ஏர்ன்ஸ்ட் & யங் (Ernst & Young)  நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. சுமார் 1,000 கோடி ரூபாய் முதலீட்டையும், 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புடைய புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் வகையில் அமையவுள்ள இந்த மையம், சென்னையில் உள்ள மவுண்ட் பூந்தமல்லி சாலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட 'GCC காரிடார்' (GCC corridor) பகுதியில் அமைக்கப்படவுள்ளது



ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், தமிழ்நாட்டில் எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் ஆகிய துறைகளில் 600 உயர் மதிப்பு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள தனது உலகளாவிய திறன் மையங்களை, தனது இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவாக்குவதற்கு உறுதியளித்து, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்  முன்னிலையில், சிக்மா டெக்னாலஜி குரூப்  நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் கார்ல்சன் மற்றும் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரியா (Sigma AB Pvt Ltd-இன் ஒரு பகுதி)மற்றும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், IAS ஆகியோருக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS,  நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  கலந்துகொண்டனர்இலண்டனில் இன்று 14.09.2026 அசோக் லேலண்ட்  நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் தீரஜ் ஹிந்துஜா, ஃபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்  நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் பிரகாஷ் பி. சாப்ரியா, இயக்குநர் ரீட்டா ஹிந்துஜா சாப்ரியா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உடன் சந்திப்பில், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற 'வெற்றி' (VETTRI) தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட்ட ரூபாய் . 2,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) அடிப்படையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் ஹிந்துஜா குழும முதலீடுகளின் முன்னேற்றம் குறித்து ஹிந்துஜா  தமிழ்நாடு முதலமைச்சரிடம் விளக்கினார். தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்வதிலும், வணிகத்தை விரிவுபடுத்துவதிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு உள்ள உறுதிப்பாட்டை விளக்கியதோடு, தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாகக் காற்றாலை மின்சக்தித் துறையில் முதலீடுகளை மேலும் அதிகரிப்பதில் இக்குழுவினர் ஆர்வம் தெரிவித்தனர். 

மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வணிக வாகனங்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்தும், வாகன உற்பத்தித் துறைக்கான ஏற்றுமதி மையமாக தமிழ்நாட்டின் பங்கை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியத் தூதர் குமரன் பெரியசாமி, IFS, நிதி மணி திரிபாதி, இ.ஆ.ப., Minister (Economic), High Commission of India , London மற்றும் தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.முதல் கட்டமாக முதல்வர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்கும்  புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய அறிக்கை வெளிவந்துள்ளது,  இதை காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் எதிர்ப்பு நிலையில் எதிர் கட்சிகள் தவறுகளை ஆய்வு செய்யும் முன்னரே நாமே செய்தால் நல்லது என்பதால் 

முன்னர் மோதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் என அறியப்பட்ட சம்வர்தனா மோதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் (SAMIL), இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு முன்னணி உலகளாவிய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் ஆகும். 

Samvardhana Motherson International Ltd. (SAMIL) , மாருதி சுசுகி, டாடா, ஹூண்டாய், மெர்சிடிஸ் மற்றும் ஃபோர்டு போன்ற உலகின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய வாகன அசல் உபகரண உற்பத்தியாளர்களுக்கும் (OEM) ஒரு முழுமையான அமைப்புத் தீர்வுகள் வழங்குநராகச் செயல்பட்டு, மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட,"மதிப்புக் கூட்டப்பட்ட" வணிக மாதிரியில் இயங்குகிற நிறுவனம் 43 நாடுகளில் பரவியுள்ள 400-க்கும் மேற்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளது 

தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் .11,000 கோடி முதலீட்டில், வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி,  கூட்டிணைப்பு  மற்றும் தளவாட வசதிகள் ஆகிய துறைகளில் சுமார் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அவர்களிடம் அவ்வளவு பணம் முதலீடு உள்ளதா என்றால் இருக்கிறது 

Authorized Share Capital ரூபாய் 1,230 crore

Market Capitalization ரூபாய் 1,73,500 crore ($18.1B USD) பங்குச் சந்தைகளில் புழக்கத்தில் உள்ள நிறுவனத்தின் பங்குகளின் ஒட்டுமொத்த தற்போதைய சந்தை மதிப்பு.

இந்தியாவின் வாகன உதிரிபாகங்கள் துறையில் Samvardhana Motherson International Ltd. (SAMIL)  மறுக்க முடியாத சந்தை முன்னணியில் உள்ளது

மார்ச் மாதம் 2026-இல் முடிவடையும் நிதியாண்டில், இந்த நிறுவனம் ரூபாய் 1,26,103.67 கோடி என்ற வரலாறு காணாத வருவாயைப் பதிவு செய்துள்ளது. இது உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் முழுவதும் அதன் ஆழமான சந்தை ஊடுருவலைப் பிரதிபலிக்கிறது.

நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஆர்டர் பட்டியல், உலகளாவிய பேரியல் பொருளாதார மந்தநிலைகளுக்கு எதிரான அதன் மிக வலிமையான பாதுகாப்பாகத் திகழ்வதோடு, அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு உறுதியான வருவாய் தெரிவுநிலையையும் வழங்குகிறது

இதன் தலைமையகம்  பாரத நாட்டில் தான் உள்ளது இது ஒரு இந்திய கம்பெனி - நிறுவனத்தின் முதன்மை பெருநிறுவனத் தலைமை அலுவலகம் மற்றும் நிர்வாக மையம் உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அமைந்துள்ளது.

அதன் முகவரி Plot No. 1, Sector 127, Noida - Greater Noida Expressway, Noida, Uttar Pradesh, 201301.

 டெல்லி அருகில் இருக்கும் கம்பெனி உடன் கையெழுத்து இட லண்டன் போக வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை சிலர் எழத்தான் செய்வார்கள் அதற்கு பதில் லண்டன் தான் சிறப்பாக பரிசோதனை மையம் 

சிறப்பான பொருளாதார வலு உள்ள ஒரு கம்பெனி கூட முதல்வர் சி. ஜோசப் விஜய் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார், கடந்த ஆட்சி போல போலியாக விளம்பரம் செய்ய வில்லை,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...