முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடி போதையில் அதிவேகமாக காரை இயக்கி விபத்தில் சிக்கி பலியான PSNA தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்

கேரளா மாநிலம் திருச்சூர் அருகில் நிகழ்ந்த மோசமான சாலை விபத்தில் திண்டுக்கல் PSNA தனியார் பொறியியல் கல்லூரியின் மாணவர்களும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 8 பேர் சமீபத்தில் உயிரிழந்தனர்.


விபத்தில் உயிரிழந்த மாணவர்களான சூர்யா திண்டுக்கல், யுவசஞ்சித் திண்டுக்கல், ஜோசுவா திண்டுக்கல், முரளி திண்டுக்கல், ஜீவா திண்டுக்கல், சந்தோஷ் மதுரை, பிரசன்னா மதுரை, விஸ்வா சேலம், ஆகியோர் தொடர் விடுமுறை என்பதால், அவர்களின் நண்பர் ஒருவர் புதிதாக வாங்கிய காரில் இந்த மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் தெரிவிக்காமல் கேரளாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 2026 செப்டம்பர் 4-ஆம் தேதி நள்ளிரவு 11:42 மணி அளவில், திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற அந்தக் கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஏற்றிய லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியதால் கார் முற்றிலும் நொறுங்கிய நிலையில், மீட்புக்குழுவினர் காரை வெட்டி எடுத்து 8 பேரின் உடல்களையும் மீட்டனர். இதுகுறித்து கேரளா மாநில காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழுவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தடுக்கப்பட்ட சாலையில் தடுப்புகளுக்கு இடையே நின்று கொண்டிருந்த லாரியின் மீது அதிவேகத்தில் சென்று மோதியிருக்கிறது மாணவர்கள் சென்ற கார். போதிய விளக்கு வெளிச்சம், உரிய வழிகாட்டிப் பலகைகள் இல்லாதது, அதி வேகமாக காரை செலுத்தியது, விதிகளை மீறி லாரியை சாலையில் நிறுத்தியிருந்தது என பல்வேறு விதி மீறல்கள், மற்றும் குறைபாடுகளே இந்த விபத்திற்கு காரணம். அதோடு இதில் சில மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்களின் மகன்கள் வெளியூருக்கு சென்றதே தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 

ஒரு வாகனத்தில் இவ்வளவு பேர் தான் செல்ல வேண்டும், இத்தனை சுமையை தான் அந்த வாகனம் தாங்கும் என்பதெல்லாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள். காப்பீடு உள்ளதா? உரிமம் உள்ளதா என்பதெயெல்லாம் உறுதி செய்ய வேண்டியது வாகன ஓட்டுனர்களின் கடமை.  சமீப காலங்களில் எதிர் திசையில் வாகனங்களை செலுத்துவது, செல்லுலர் தொலைபேசியில் பேசிக்கொண்டே வாகனங்களை செலுத்துவது, அதி வேகமாக வாகனத்தை செலுத்துவது போன்ற விதி முறை மீறல்கள் அதிகளவில் காணப்படுவது விபத்துக்களை அதிகரிக்க செய்கிறது.

தங்கள் பிள்ளைகள் வசதியாகச் செல்ல வேண்டும் என்று பெற்றோர் நினைப்பதில் தவறில்லை, ஆனால், அவர்கள் பாதுகாப்பாகச் செல்கிறீர்களா என்பதை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. 

அதே போல், சாலைகளை சீராக அமைப்பது, பராமரிப்பது, விதிமீறல்களை முறையாக கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பது என்பதெல்லாம் அரசின் கடமை. மக்கள் சட்டத்தை மதிக்க வேண்டிய அதே நேரத்தில், அவைகளை மீறும் போது உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே இது போன்ற கொடூர சம்பவங்களை தவிர்க்க முடியும். அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் பொது மக்கள் அதை மதிக்காமல் அலட்சியப்படுத்துவதாலேயே பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எதிரில் வாகனம் வந்தால் பிரேக் பிடித்து நிறுத்தினால் கௌரவக் குறைவு எனும் மனநிலை சமீப காலமாக காணமுடிகிறது, அந்த மனநிலை வர காரணம், தாங்கள் தான் எநிலும் உயர்வானவர்கள் ன்ற தவறான மனநிலை கொண்ட நோயாளிகள் கூடியதால் வரும் திகழ்வு அதுவே பல விபத்துகளுக்கு காரணமாகிறது, கேரளாவில் திண்டுக்கல் மாணவர்கள் இறந்தது வேகம் மட்டும் அல்ல காரணம், குடி போதை மதுவும் ஒரு காரணம் இவர்கள் உடலை பிரேதப்பரிசோதனை


செய்த டாக்டர் ஹிதேஷ் சங்கர் தன் முகநூல் பதிவில், அனைவருமே மது குடித்து இருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது என்கிறார். டாக்டர் ஹிதேஷ் சங்கர் கேரளா மாநிலம் திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மனையில் தடயவியல் துறைத் தலைவராகப் பணியாற்றும் முன்னணி தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணர், திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர். பல முக்கிய மற்றும் பரபரப்பான வழக்குகளில் பிரேதப் பரிசோதனை செய்து துல்லியமான மருத்துவ அறிக்கைகளை வழங்குவதில் திறமையாக அறியப்பட்டவர்.

அவர்கள் கச்சேரிப்படியில் உள்ள பத்தாங்கல் என்கிற இடத்தில் மது குடித்து யார் மீதோ காரை மோதுவது போல சென்று இருக்கிறார்கள்,  காரை விரட்டி மறித்து அங்கேயே கூட்டம் கூடி இருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அப்பகுதி மக்கள் காவல்துறையை அழைத்து இருக்கிறார்கள் அங்குள்ள உள்ளூர் மக்கள்,

இவர்கள் அனைவரும்  குடித்து இருந்ததால்.. காவல்துறை வந்தால் பிரச்னை ஆகிவிடும் என்று பயந்து வண்டியை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பி இருக்கிறார்கள்.

யாரும் துரத்திப் பிடித்துவிடுவார்களோ என்கிற அச்சமும். ஊருக்குச் சென்று விட்டால் பாதுகாப்பு என்கிற எண்ணமும், குடித்து இருந்த மதுவும் சேர்ந்து அதிவேகமாக காரை இயக்கி வந்து இருக்கிறார்கள். அடுத்த ஊருக்குச் சென்று விட்டால் காவல்துறை வராது என்கிற வேகம்.

மது குடித்தால், கவனம் இருக்காது. பார்வை தெளிவு இருக்காது. முடிவு எடுக்கும் திறன் இருக்காது. பின் விளைவுகள் தெரியாது. உயிர் போனாலும் பயம் தெரியாது,

இப்படிப்பட்ட கண் மூடிய வேகத்தில் பதட்டத்தில் வந்த போது, முறை கேடாக நிறுத்தி இருந்த சரக்கு லாரிக்கு இடது புறத்தில் இரண்டு லாரிகள் நிறுத்தி இருக்க வலது புறத்தில் டிவைடர் மேலே ஏறி இறங்கி வேகம் குறையாமல் லாரி சேஸ் அடியில் காருடன் சொருகி இருக்கிறார்கள்..

ஒருவரைத் தவிர அனைவரும் சதைப் பிண்டங்களாகத் இருந்தது தான் கொடுமை, விலை உயர்ந்த கார் ஏர் பேக் இருக்கு என்கிற குருட்டு தைரியம் விதிக்கு முன் வேலை செய்ய வேண்டிய மதி மது அருந்தி மயக்கம் உள்ள அறிவாளிகளுக்கு ஏர்பேக் சேப்டி என்பது 90 கீமீ வேகம் வரை தான் பலன் என்பது தெரிவதே இல்லை.

ரோகிணி நட்சத்திர நாள் என்று குருவாயூர் சென்றவர்களுக்கு மது குடித்து பக்தியும் இல்லை. புத்தியும் இல்லை. குடும்பம் கண்டித்து வளர்க்காத பிள்ளைகள்  20 வயதில்  குடி போதை, அதில் வண்டி ஓட்டும் அறிவாளித் தனம் எல்லாம் தற்போதய சினிமா, மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவில்லாத தவறை விதைக்கும் மீடியா தந்த குருட்டுத் தைரியம்.

இவர்கள் யாருக்குமே உண்மையாக இல்லாமல் வளர்ந்த 2கே கிட்ஸ் என்பது தான் இவர்களை இழந்த அந்தப் பெற்றோர்களின் வேதனை.

இனி வரும் காலம் வாழ்க்கை பற்றியும், சமூக சிந்தனையும் அறவே அற்ற  வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, அறியாத ஒரு இழிவான தலைமுறை இளைஞர்களால் நிரம்பி இருக்கும். என்பது அவர்கள் தலை முடியை வைத்தே முடிவு செய்து விடலாம்,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

திருவோணம் திருநாளில் பிள்ளையார்பட்டி ஆலயத்தில் கோலமிட்ட நகரத்தார் குலப் பெண்கள்

இராஜநாராயணபுரம் எனும் மருதங்குடி தற்காலம் பிள்ளையார்பட்டியாகும். இங்கு தேசி வினாயகர் எனும் ஸ்ரீ கற்பக விநாயகர் அருள் தரும் ஆலயம் முதல் நூற்றாண்டு காஞ்சிபுரம் முற்காலப் பல்லவ மன்னர்கள் அமைத்த குடவரைக் கோவில் பிற்காலப் பாண்டிய மனனர்களின் திருப்பணிக்குப் பின் நான்காம் திருப்பணி முதல் நகரத்தார் எனும் சோழநாட்டு மகுட வைசியர் பாண்டிய நாட்டில் செட்டிலான செட்டியார்கள் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகத்தில் உள்ள திருத்தலம் பிள்ளையாபடடி ஆகும்   இங்கு வினாயகர் சதுர்த்திப் பெருவிழா செப்டம்பர் மாதம்  ஐந்தாம் தேதியில் துவக்கம். ஆலயத்தில் ஸ்ரீ கற்பகவிநாயகர், ஸ்ரீ மருதீசர் உடனாகிய வாடாமலர் மங்கை, சன்னதிகளில் வழிபாடு இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்தாண்டு செப்டம்பர் மாதம் .14 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதன்படி ஸ்ரீ கற்பகவிநாயகர் கோயிலில் வரும் செப்டம்பர் மாதம் .5ஆம் தேதி சனிக்கிழமை காலையில் கொடியேற்றத்துடன் சதுர்த்திப் பெருவிழாவின் முதல் நாள் விழா துவங்குகிறது. அன்றிரவு தங்க மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...