சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக திரு ராஜேஷ் பிந்தால் நியமனம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த திரு தோத்தாதில் பாஸ்கரன் நாயர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி திரு ராஜேஷ் பிந்தால் தலைமை நீதிபதியாக 2021 ஏப்ரல் 29ம் தேதி முதல் பணியாற்ற குடியரசுத் தலைவர், அரசியல் சாசனத்தின் 223 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி நியமனம் செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது. நீதிபதி திரு ராஜேஷ் பிந்தால், பி.காம். எல்எல்.பி கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார். பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம், வரிவிதிப்பு, அரசியல் சாசனம், சிவில் மற்றும் அரசு வழக்குகளில் இவர் வழக்கறிஞராக பணியாற்றினார். வரிவிதிப்பு விஷயங்களில் இவர் நிபுணத்துவம் பெற்றவர். வருமானவரித்துறை மற்றும் மத்திய, மாநில அரசு அமைப்புகளில் இவர் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு ம...
RNI:TNTAM/2013/50347