முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இந்தியாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் 6 சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல்

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்றத் தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதன்படி, 6 அக்டோபர் 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் தனி மற்றும் தாராபுரம் தனி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தேர்தல்  (அட்டவணை): தேர்தல் அறிவிப்பாணை மற்றும் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் செப்டம்பர் 9, 2026  வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 17, 2026 வேட்புமனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 18, 2026 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 19, 2026  வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அக்டோபர் 6, 2026 வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 இடைத்தேர்தல் நடக்கும் பிற தொகுதிகள்: பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி  மற்றும் மேற்கு வங்கம்: ரெஜினா Block மற்றும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிகள்       அஸ்ஸ...

திமுகவின் ஊழலை சட்டப்பேரவை பதிலுரையில் ஆதாரங்களுடன் உரை வீச்சாக்கிய முதல்வர்

”பேசிப் பழகிய பொய்.. வாங்கிப் பழகிய கை.. போட்டுப் பழகிய பை.. இது தான் திமுக”... கவியரசர் கண்ணதாசனின் வரியை சுட்டிக்காட்டி தி.மு.க.வை சட்டமன்றப் பேரவையில் வெளுத்து வாங்கிய முதல்வர் சி. ஜோசப் விஜய்  தான் பேசிய ஒருமணிநரம் அதாவது 60 நிமிடங்களில் 60 வருஷ கட்சி திமுகவின் லஞ்சம் லாவண்யம் ஊழல் முறைகேடு மற்றும் திருட்டுத் தனங்களை கண்கள் சிவக்க கோபத்துடன், ஆக்ரோஷமாகவே பட்டியலிட்ட முதல்வர் சர்க்காரியா கமிஷன் ஊழல் முதல் ஆம்ஸ்டராங்க் படுகொலை வழக்கு வரை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று 7 செப்டம்பர் 2026ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு  பதிலுரை வழங்கியுள்ளார். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய பல்வேறு புகார்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் முதலமைச்சரின் இந்த உரை சிறப்பாகவே அமைந்திருந்தது.  அதில் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்.உதயநிதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் பல...

மதுரை நாயக்க மன்னர்கள் கால ஒற்றர் படையான பூம்பூம் மாட்டுக்காரர்களும், ஆடை நாகரீகம் அறிந்த சௌராஷ்ட்ரார்களும் குறித்த வரலாறு

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் மாமன்னர் திருமலை நாயக்கர் (பொஆ1623 முதல் 1659 வரை) உள்ள ஆட்சி செய்த காலத்தில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்காக மிகவும் வலுவான ஒற்றாடல் முறை அதாவது உளவுத் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் இருந்தது. எதிரி நாடுகளின் ராணுவ நகர்வுகள் மற்றும் உள்நாட்டு சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிய இந்த ஒற்றர்கள் படை பயன்படுத்தப்பட்டனர்மன்னர் திருமலை நாயக்கர் காலத்து ஒற்றர் முறையின்  தலைமை மற்றும் கட்டுப்பாடு ஸ்தானாபதி  ஒற்றர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனைவரும் 'ஸ்தானாபதி' (அரசின் தூதுவர் அல்லது உயர் அதிகாரி) என்பவரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டனர், ஒரு ஒற்றர் வழங்கும் தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, அவருக்குத் தெரியாமல் மற்றொரு ஒற்றர் நியமிக்கப்பட்டார்,  ஒரு ஒற்றர் தவறான தகவலை அளித்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டாரே தவிர, அவருக்கு மரண தண்டனையோ கடுமையான சித்திரவதையோ எதுவும் வழங்கப்படவில்லை. அண்டை அரசர்கள் ஆட்சி செய்த மைசூர், தஞ்சாவூர் மற்றும் பிஜப்பூர் சுல்தானகங்களின் ரகசியங்களை அறிய வேண்டி இருந்ததால், ஒற்றர்கள் பல ம...