வேலூர் சரகத்தில் 27 காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாறுதல் : வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் ஏ.ஜி.பாபு உத்தரவு
வேலூர் சரகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பணியாற்றும் 27 காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்ற உத்தரவை வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு நேற்று வழங்கியுள்ளார். அதில் கடலாடி மங்கையர்கரசி ஜோலார்பேட்டைக்கும், அங்கு பணியாற்றிய லட்சுமி, குடியாத்தம் நகருக்கும், இராணிப்பேட்டை கலால் யுவராணி உம்ராபாத்துக்கும் அங்கு பணியாற்றும் நிர்மலா, குடியாத்தம் மகளிர் காவல் நிலையத்துக்கும்.
குடியாத்தம் மகளிர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் நந்தினிதேவி பெரணமல்லூருக்கும், தேசூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆம்பூர் ஊரகத்துக்கும், அரக்கோணம் நகர் ஆய்வாளர் முரளிதரன் கடலாடிக்கும், வேட்டவலம் ஆய்வாளர் நிலவழகன் வேலூர் ஊரகத்துக்கும், திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகம் ஆளாவார் நந்தகுமார் வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கும், இராணிப்பேட்டை மாவட்டம் சைபர் குற்றப்பிரிவு சாலமன் ராஜா கண்ணமங்கலத்துக்கும்,
காவேரிப்பாக்கம் ஆய்வாளர் மகாலட்சுமி இராணிப்பேட்டை கலால் பிரிவுக்கும், லத்தேரி ஆய்வாளர் கவிதா போளூர் மகளிர் காவல் நிலையத்துக்கும், வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக ஆய்வாளர் திருநாவுக்கரசு சோளிங்கர் காவல் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய ஜெயபிரகாஷ் போளூர் காவல் நிலையத்துக்கும், வேலூர் ஊரகம் ஆய்வாளர் அல்லிராணி ஆரணி மகளிர் காவல் நிலையத்துக்கும்.
ஆரணி மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ஷாகின் வேலூர் மகளிர் காவல் நிலையத்துக்கும், வேலூர் தெற்கு ஆய்வாளர் கலையரசி, செய்யாறு கலால் பிரிவுக்கும், போளூர் ஆய்வாளர் கோவிந்தசாமி பாணாவரத்துக்கும், வேலூர் தீவிர குற்றங்கள் தடுப்புப் பிரிவு-2 ஆய்வாளர் கவிதா திருவண்ணாமலை மாவட்டக் குற்றப் பிரிவுக்கும், அரக்கோணம் மகளிர் ஆய்வாளர் புனிதா போளூர் கலால் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய பிரகாஷ் கந்திலிக்கும், அரக்கோணம் ஊரகம் ஆய்வாளர் கோகுல்ராஜன் ஆரணி நகருகும், கந்திலி ஆய்வாளர் மணிமாறன் காவேரிப்பாக்கத்துக்கும், பாணாவரம் ஆய்வாளர் லட்சுமிபதி கீழ்பென்னாத்தூருக்கும், திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு ஆய்வாளர் நாகராஜன், வேலூர் மாவட்டக் குற்ற ஆவண காப்பகத்துக்கும், கீழ்பென்னாத்தூர் ஆய்வாளர் ஷியாமளா வேலூர் தெற்கு குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கருத்துகள்