முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

தேசிய போர் நினைவுச்சின்னதின் 4வது ஆண்டு விழாவில் மாவீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி

தேசிய போர் நினைவுச்சின்னதின் 4வது ஆண்டு விழாவில் மாவீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி தேசிய போர் நினைவுச்சின்னம் இன்று நான்காவது ஆண்டைக்  கொண்டாடுகிறது. இந்நாளைக் குறிக்கும் வகையில், முப்படைத் தலைமை தளபதி  ஏர் மார்ஷல் பி.ஆர். கிருஷ்ணா, துணை ராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் எம்.வி.சுசீந்திர குமார், கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிரண் தேஷ்முக் , விமானப் படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி ஆகியோர் நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, துணிச்சலான வீரர்களின் தியாகங்களுக்குச் சான்றாக விளங்கும் இந்த நினைவிடம், பிப்ரவரி 25, 2019 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடியால்  நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. தேசபக்தி, தைரியம், தியாகம் மற்றும் கடமையில் அர்ப்பணிப்பு உணர்வை வளர்க்கும் நோக்கத்துடன் அதிகபட்ச மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு  இந்த முயற்சிகள் ஊக்கமளிக்கும் வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த மாவீரர்களுக்கு மக்கள் டிஜிட்டல் அஞ்சலி செலுத்துவதற்காக நினைவிடத்திற்கு அருகில்  திரைகள் நிறுவப்பட்டுள்ளது....

உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் புனேவில் நடைபெற்ற ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார். இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரத்தை 35 முதல் 40 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார். இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல ஆண்டுகளுக்கு இது தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தியா ஏற்கெனவே பத்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இன்று இந்தியாவிடம் இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது எனவும் இது மிகப்பெரிய பலமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில், ரஷ்யா - உக்ரைன் மோதல் கட...

குளித்தலை வட்டத்தில் இறப்புச் சான்று வழங்க ரூபாய்.500 இலஞ்சம்; பெற்ற பதிவு எழுத்தருக்கு மூன்றாண்டுகள் சிறை மற்றும் அபராதம்

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் இறப்புச் சான்று வழங்க ரூபாய்.500 இலஞ்சம்; பதிவு எழுத்தருக்கு மூன்றாண்டுகள் சிறை- கரூா் மாவட்டம் இறப்புச் சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய முன்னாள் பதிவு எழுத்தருக்கு கரூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம்  புரிந்தலூர் பாலு. இவா் தனது தந்தை இறந்ததையடுத்து, இறப்புச் சான்று கோரி குளித்தலை வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தபோது, இறப்புச் சான்று வழங்க பதிவு எழுத்தராக அப்போது பணிபுரிந்த காலத்தில் எம்.சந்திரசேகா் (வயது 53) என்பவா் ரூ.500 லஞ்சமாகக் கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாகத் தெரிவித்துள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலு, அது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும்  இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் செய்ததன் பேரில், சந்திரசேகரை பணம் பெற்ற போது ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர்  கைது செய்து கரூா் மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு விசா...

நீதிமன்றங்களில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் கடிதம்

சென்னை உயர் நீதிமன்றம் அறிக்கை கேட்ட நிலையில், தமிழ்நாடு  முழுவதும் நீதிமன்றங்களில் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு தேடப்படும் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை தலைமை இயக்குனருக்கு அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், "நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்டுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரை ஆஜர்படுத்துவதற்கான செயல்முறையைத் தவிர வேறில்லை. குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு பிரிவு 7 உட்பிரிவு 2 ன் கீழ், ஜாமீனில் வெளி வர முடியாத வாரன்ட்டை பிறப்பித்த நீதிமன்றங்களின் மாஜிஸ்திரேட்டால் செயல்படுத்தப்படும் வரை அல்லது அதை ரத்து செய்யும் வரை நடைமுறையில் இருக்கும். குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் போது, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை, மாநிலத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டுகள் குறித்து தங்களது கவலையைத் தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், நிலுவையிலு...

ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது

அன்னியச் செலாவணி (ஹவாலா) பண மோசடி தொடர்பான வழக்கில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத் தலைவர் வர்கீஸின் ரூபாய். 305.84 கோடி மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் மீறியதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.  விளம்பரம் மூலம் பிரபலமான நகைக் கடையான ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில், அதன் ரூபாய்.305.84 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து முடக்கியுள்ளது. அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிகளை மீறியதாகவுண் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவிலிருந்து ஹவாலா மூலம் துபாய்க்கு பெரும் தொகையை கை மாற்றியதும், பின்னர் ஜோய் ஆலுக்காஸ் வர்கீஸ் என்பவருக்கு சொந்தமான 100 சதவீதம் துபாயில் உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜூவல்லரி எல்எல்சி நிறுவனத்தில் முதலீடு செய்ததும் இந்த வழக்கு தொடர்பானது தான் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய் கிழமையன்று, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் தனது ரூபாய். 2,300 கோடி ஐபிஓவை திரும்பப் பெற்றது. அதன் நிதி முடிவுகளில் கண...

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்கள் நியமன ஆதாரச் சான்றிதழ்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர்

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்கள் நியமனத்திற்கான ஆதாரச் சான்றிதழ்களை குடியரசுத் தலைவரிடம் வழங்கினர் தெற்கு சூடான், ஓமன், பெரு மற்றும் கம்போடியா, செஷல்ஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள் மற்றும் துணைத் தூதர்கள் குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்முவை சந்தித்து தங்கள் நியமனத்திற்கான ஆதாரச் சான்றிதழ்களை வழங்கினர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமதி திரௌபதி முர்மு அந்த சான்றிதழ்களை ஏற்றுக் கொண்டார். கீழ்கண்ட பட்டியலில் ஆதாரச் சான்றிதழ்களை வழங்கியவர்கள் விவரம்: மேன்மை பொருந்திய திருமதி.விக்டோரியா சாமுவேல் அரு, தெற்கு சூடான் குடியரசின் தூதர் மேன்மை பொருந்திய திரு.இஸ்சா சலா அப்துல்லா சலா அல் ஷிபானி,  ஓமன் தூதர் மேன்மை பொருந்திய திரு.ஜாவியர் மேனுவெல் பாலினிச் வேலர்டி, பெரு குடியரசின் தூதர் மேன்மை பொருந்திய திருமதி.லலதியானா அக்குச்சி, செஷல்ஸ் குடியரசின் துணைத் தூதர் மேன்மை பொருந்திய திரு.கொய் குவாங், கம்போடியா அரசின் தூதர்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய காணொலி உரை மொழிபெயர்ப்பு  மேன்மையுடையவர்களே, ஜி20 கூட்டத்திற்கு வருகை தந்துள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு எனது கனிவான வணக்கம். இந்தக் கூட்டம் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான முதல் பேச்சுவார்த்தையைக் குறிக்கும் விதமாக அமைகின்றது. இந்தக் கூட்டம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு நான் எனது நல்வாழ்த்துக்களை கூறும் அதே வேளையில், நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் நான் அறிவேன். உலகளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், நீங்கள் நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரத்திற்கு நூறாண்டுகளுக்கு ஒருமுறை மிகப் பெரிய பின்னடைவை கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள் அதன் தாக்கத்திலிருந்து தற்போது வரையில் மீள்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவி - பொருளாத...