முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சிவகங்கை 2 நபர் கொலையில் நீதி கேட்டு 3 ஆம் நாள் தொடர்ந்து போராட்டம்

சிவகங்கையில் இரண்டு இளைஞர்கள் ஆள்மாறாட்டமாக கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக அறியும் சம்பவத்தைக் கண்டித்து, இன்று 19 செப்டம்பர் 2026 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் சமுதாய பொதுமக்கள் மூன்றாம் நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று சிவகங்கை அருகில் பையூர் கொடிக்காடு கண்மாய் பகுதியில் இரண்டு இளைஞர்களை விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தை அடுத்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் தொடர் சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வருவதைக் காண்கிறோம், கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும், கொலைக்கான பின்னணியை முழுமையாக வெளிக்கொண்டு வர வேண்டும், வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூபாய் 50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை உயிரிழந்தவர்களின் சடலங்களைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என உறவினர்கள் த...

பாஜகவிலிருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம் கட்சிக்கு இழப்பு தொண்டர்கள் வருத்தம்,

பாஜகவின் மாநிலப் பொதுச்செயலாளரும் காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களின் பொறுப்பாளருமான முத்துப்பேட்டை கருப்பு முருகானந்தம் செயல்பட்டு வந்தார். சங்கப்பணி, கட்சிப்பணி என நாகபடடினம், திருவாரூர், தஞ்சாவூர் மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை என மணடலத்தின் பாஜகவை நீண்ட காலம் வழிநடத்தும் தலைவராகவே அகமுடையார் தேவர் சமூகத்தின் பாஜக முகமாக விளங்கினார் கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியின் பெண் ஒருவர் 2024-ஆம் ஆண்டு முதல் திருச்சிராப்பள்ளியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு எம்.முருகானந்தம் தன்னை உடல் ரீதியாக தாக்கியதாகவும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும், தனது மிரட்டல் விடுவதாகவும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறும் கோரி கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்துள்ளார். கட்சியில் ஏற்கனவே இருந்த ஆளுமை நிறைந்த ஒரு தலைவர் கரு. நாகராஜன் சிவகங்கை மாவட்டம் சென்னையில் வசித்தவர் இதே போல ஒரு குற்றச்சாட்டு காரணமாக வெளியறறப்பட்டு, தற்போது வி த லீடர்ஸ் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆகச் செயல்படுகிறார்,   தற்போது  அதே சமயம் ...

தமிழ்நாடு தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கம்

தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம் செப்டம்பர் 28 ஆம் தேதி துவக்கம்  தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு  தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்காக முதல் தவணையாக ஒரு லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்கிறது அரசு  ஜூன் 22ஆம் தேதியிட்டு அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கத் திட்டம்  தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் மக்களில் தாய்மார்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்  ஜூன்.மாதம் 22 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் .28 ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 107 மையங்களில்  100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம்  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது தங்கமோதிரம் வழங்கப்படும் என தமிழ்நடு அரசு அறிவிப்பு.தமிழ்நாடு அரசின் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கான டெண்டரை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே .செப்டம்பர் 10, 2026 ஆம் தேதியன்று தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்  தீர்ப்பை வழங்கியது.  அரசு...

சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது, நடந்தது என்ன?

சிவகங்கை இரட்டைக் கொலையில் 5 நபர்கள் கைது,  நடந்தது என்ன? சிவகங்கை அருகே இரண்டு இளைஞர்களை விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இரட்டைக் கொலை வழக்கின் விவரங்கள் வருமாறு:  கொல்லப்பட்டு உயிரிழந்தவர்கள்: தெய்வேந்திரன் (வயது 27): சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா குருந்தனிவாரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர். கோயமுத்தூரில் கார் வாடகைத் தொழில்  செய்து வந்தார். பூப்பாண்டி (வயது 25): சிவகங்கை மாவட்டம், சிறுவேலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது நண்பர் தெய்வேந்திரன் சமீபத்தில் புதிய மாருதி எர்டிகா காரை வாங்கியிருந்தார். அதை சர்வீஸ் செய்துவிட்டு, நண்பர் பூப்பாண்டியுடன் சிவகங்கை - காளையார்கோவில் செல்லும் சாலையில் உள்ள பழமலைநகர் - கொடிக்காடு கண்மாய் பகுதிக்குச் சென்று காரை நிறுத்திவிட்டு மது குடித்துளளனர். அப்போது இருசக்கர வாகனங்களில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல் இவர்களைச் சூழ்ந்தததும். ஆபத்தை உணர்ந்து இருவரும் கண்மாய்க்குள் ஓடினர். ஆனால், அந்தக் கும்பல் அவர்களை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியதில் தலை மற்றும...