முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

இணையதள மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 205 பேர் கைது

இணையதள மோசடிகளுக்கு வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டதாக தமிழ்நாடு முழுவதும் 205 பேர் கைது  பொதுமக்களின் வங்கிக் கணக்குகளை தவறாகப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 205 சைபர் குற்றவாளி களை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது. தேசிய இணையவழி குற்றப் புகார் பதிவேற்ற https://cybercrime.gov.in தளத்தில் பதிவான புகார்களை சென்னை காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு தீவிரமாக ஆய்வு செய்ததில், பணத்தாசை காட்டி பொது மக்களின் வங்கிக் கணக்குகளை பெறும் சைபர் குற்றவாளிகள், அவற்றை சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கு தொடர்ந்து பயன்படுத்தி வருவதும் தெரியவந்ததையடுத்து, சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் கடந்த 6. மற்றும் 7-ஆம் தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில், பல்வேறு வங்கிகளில் செயல்பட்டு வந்த 310 'மியூல்' வங்கிக் கணக்குகள் (மோசடிக்கு பயன்படுத்தப்படும் வாடகைக் கணக்குகள்) கண்டறியப்பட்டன. அதன் மூலம் நடந்த பணப் பரிவர்த்தனைகளை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், இணைய மோசடிகளுக்காகவே இந்தக் கணக்குகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. சென்னை, கோயம்பத்த...

சேலத்தில் நிறுவனம் நடத்தி மக்கள் பணம் 800 கோடி மோசடி செய்த பெண்

சேலத்தில் ராகினி என்ற பெண் மற்றும் அவரது கணவருடன் இணைந்து, பணத்தாசை பிடித்த பொதுமக்களிடம் ரூபாய் 800 கோடி வரை பெரும் பண மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த விவகாரத்தின் முக்கியப் பின்னணிகள் குறித்துக் காண்போம்  ரூபாய் 1 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு மாதந்தோறும் ரூபாய் 8,000 வட்டி தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.  இந்தத் தம்பதி முக்கியமாக உள்ளூர் தொழிலதிபர்களையும், பெரிய முதலீட்டாளர்களையும் மட்டுமே குறிவைத்து கச்சிதமாக இந்த மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளனர், நிறுவனத்திற்கு AF3, AF4 போன்ற சிறப்பு உரிமங்கள் (Licenses) வாங்குவதாகக் கூறி முதலீடுகளைப் பெற்றுள்ளனர். தற்போது இந்த மெகா மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறையில் வழக்குப் பதியாமல் காலம் தாழ்த்தி வருவதாகலும் மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல் துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் பொருளாதாரக் குற்றப்பிரிவின் (EOW) தலையீடு, மற்றும் PMLA சட்டம் மூலம் அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்த கூடுதல் அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் எதிர...

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்.

தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத் தலைவராக மணிப்பூர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் நியமனம்.   தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் மறுசீரமைப்பு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தை மறுசீரமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை G.O. (Ms.) No.202, சட்டத்துறை (LC), நாள்: 07.08.2026 என வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்ட ஆணையத்தின் தலைவராக நீதியரசர் டி. கிருஷ்ணகுமார்  மணிப்பூர் மாநில உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியை தலைவராகவும், முழுநேர உறுப்பினர்களாக  நீதியரசர் RMT. டீக்கா ராமன் – சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி மற்றும்  T.K. ராமச்சந்திரன், I.A.S. – முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் அருணகிரி – முன்னாள் சட்டத்துறை செயலாளர்  உடன்  பகுதி நேர உறுப்பினர்களாக T.மோகன் தாஸ்  முன்னாள் மாவட்ட நீதிபதி, மற்றும் R. கோவிந்தராஜன்  முன்னாள் மாவட்ட நீதிபதி, மற்றும்  சட்டத்துறைச் செயலாளர் நிலையில் உள்ள அரசு அதிகாரி, சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்–செயலாளராக நியமிக்கப்படுகிறார். சட்ட ஆணையத்த...

வனத்துறைச் சட்டத்திற்கு எதிராக தேனி மாவட்டம், மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராம மக்கள் போராட்டம்

தேனி மாவட்டம், மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் வசித்து வரும் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக,  7 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மிகப்பெரிய முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர்  ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்புக்காடு காப்பகம் (Reserve forest)  காரணம் காட்டி அப்பகுதியில் வசிக்கும் மக்களை சட்டப்படி வெளியேற்ற உத்தரவிடப்பட்டது .வருஷநாடு மற்றும் மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 98 மலைக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4,011 குடும்பங்களுக்கு வெளியேற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.  மக்களின் கோரிக்கையில் மத்திய அரசின் மக்களை வெளியேற்றும் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எனவும் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act, 2006)-ன் கீழ் மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கும் சட்டப்பூர்வ உரிமைகளை உச்ச நீதிமன்றத்தில் தமி...

பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் மற்றொரு நபர் ஐசியுவில்

பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் . பழனி துறவி பெயரில் உள்ள மடத்தின் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை  திமுக ஆட்சிகாலத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி நிதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக் பணியில் இருந்தவராவார், தற்போது பழனியில் ரூபாய் .100 கோடி மதிப்புள்ள மடத்தின் சொத்தில் நடந்த மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 3 நாட்கள் விசாரணைக்கு எடுத்த காவல் முடிந்து சிறைக்கு திரும்பிய சில மணிநேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த மரணம் நிகழ்ந்து அவரைச் சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளை மடத்திற்குச் சொந்தமான ரூபாய் .100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (வயது 65), மதுரை மத்திய சிறையில் நேற்று ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி ...

ரூபாய் .50,000 லஞ்சம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கைது

ரூபாய் .50,000 லஞ்சம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் கைது  சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக, முதுகுளத்தூர் சேர்ந்த நபரிடம் ரூபாய் .50,000 லஞ்சம் வாங்கிய பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (RDO) சரவண பெருமாள் பணிபுரிந்து வருகிறார். சவுடு மண் எடுப்பதற்கு  வருவாய் கோட்டாட்சியர் தான் முறைப்படி அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அனுமதி கோரி மனுச் செய்தவவரிடம், ரூபாய் .50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என சரவண பெருமாள் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர், இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்தார். இன்று காலை அவர்கள் அறிவுறுத்தலின்படி மனுதாரர் அரசு சாட்சியுடன் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் .50 ஆயிரம் பணத்தைக் கொண்டு சென்று கொடுத்தார். அதை கோட்டாட்சியர் சரவணப் பெருமாள் வாங்கியபோது, மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். லஞ்சம் வாங்குவதற்கு உடந்தையாக இருந...